நிறம் குறித்து தாழ்வுமனப்பான்மை – தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி

 

நிறம் குறித்து தாழ்வுமனப்பான்மை – தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி

தர்மபுரி அருகே தனது நிறம் குறித்த தாழ்வுமனப்பான்மையால் தனியார் கல்லூரி மாணவி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிறம் குறித்து தாழ்வுமனப்பான்மை – தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி

தர்மபுரி அடுத்த ஒடசல்பட்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகள் சக்திபிரியா(20). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த அவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது நிறம் காரணமாக சக்திபிரியாவிற்கு நீண்ட காலமாக தாழ்வு மனப்பான்மை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் இருந்தவர்கள் கவனிக்காதபோது திடீரென விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிறம் குறித்து தாழ்வுமனப்பான்மை – தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி