எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை!

 

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் உடன் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பூசியான Covaxin-ஐ மருந்தை மனிதர்களுக்கு பரிசோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது.

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை!

முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு வெற்றி கிடைத்ததால் அடுத்த கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி Covaxin மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் வருகிற ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி ஐ.சி.எம்.ஆர் உத்தரவிட்டுள்ளது.

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை!

இந்நிலையில் “மனிதர்களுக்கு  COVAXIN தடுப்பு மருந்து சோதனை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில்  இன்று முதல் பரிசோதனை தொடங்கியது. கட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த பரிசோதனையில் முதல் டோஸ் தடுப்பு ஊசி தரப்பட்ட தன்னார்வலர்களுக்கு 14 நாள் இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் எஸ்ஆர்எம் மருத்துவமனை கல்லூரியில் மட்டுமே கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.