பள்ளி மைதானம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு… கொன்று புதைக்கப்பட்டாரா? என விசாரணை…

 

பள்ளி மைதானம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு… கொன்று புதைக்கப்பட்டாரா? என விசாரணை…

கன்னியாகுமரி

நாகர்கோவிலில் தனியர் பள்ளி மைதானம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்.ஜி.ஓ காலனி பகுதியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகேயுள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் கட்டுமான பணிக்காக இன்று தொழிலாளர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குழிக்குள் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் எலும்புக்கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பள்ளி மைதானம் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு… கொன்று புதைக்கப்பட்டாரா? என விசாரணை…

தகவலின் பேரில் நாகர்கோயில் டிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எலும்புக்கூட்டினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவ இடத்தில் கிடந்த காலணி மற்றும் ஆடைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த நபர் குறித்தும், அவர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளியின் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.