சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரம்; தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

 

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரம்; தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச்சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் தந்தை,மகன் உயிரிழந்த விவகாரம்; தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏடிஜிபி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.