அறந்தாங்கி 7 வயது சிறுமி கொலை; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

 

அறந்தாங்கி 7 வயது சிறுமி கொலை; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அந்த சிறுமியை தேடிய போலீசார், நேற்று அறந்தாங்கியில் இருக்கும் ஒரு வறண்ட குளத்தில் சடலமாக கண்டெடுத்தனர். அந்த சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்த நிலையில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இவ்வாறு தமிழகத்தில் பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி கொலை செய்யப்படும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அறந்தாங்கி 7 வயது சிறுமி கொலை; தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.