பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும்- ஹெச்.ராஜா

 

பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும்- ஹெச்.ராஜா

கரூர் எம்பி ஜோதிமணி நேற்று தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட பாஜக கரு.நாகராஜன் ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த எம்பி ஜோதிமணி நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. எம்.பி.ஜோதிமணியும் பாஜக குறித்து அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடியை கல்லால் அடிக்க வேண்டும் எனவும் வன்முறையை தூண்டும் வகையிலும் எம்பி ஜோதிமணி பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இலுப்பூர் மற்றும் திருமயம் காவல்நிலையத்தில் ஜோதிமணி மீது புகார் அளிக்கப்பட்டது.

rr

பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும்- ஹெச்.ராஜா

இந்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “பிரதமரை கல்லால் அடிப்பேன் என்று பேசியிருக்கும் ஜோதிமணியையும், பிரசன்னாவையும் கைது செய்ய வேண்டும். பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும். தயாநிதி மாறனையும், ஆர்.எஸ். பாரதியையும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். திக மற்றும் திமுக போன்ற திராவிட இயக்கங்கள் அனைத்தும் எப்போதுமே பட்டியலின மக்களின் விரோதிகள். வருவாய் துறையில் உள்ள ஆவணத்தை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். காசு கொடுத்தால் வருவாய் துறையினரே, ஆவணங்களை திருத்தி கொடுத்து விடுவார்கள்” என பேசினார்.