மகாலெட்சுமி தாயாரை வழிபடுவது எப்படி ?

 

மகாலெட்சுமி தாயாரை வழிபடுவது எப்படி ?

வீட்டில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்க, மகாலெட்சுமி தாயாரை வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வழிப்பட்டால் சகல சௌபாக்கியங்களும், செல்வங்களும் செழிக்கும்.

மகாலெட்சுமி தாயாரை வழிபடுவது எப்படி ?

மகாலெட்சுமி தாயாரை வெற்றிலை, பாக்கை வைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்வதில் இருக்கும் மகத்துவம் மிக அதிகம். முடிந்தவரை வெள்ளிக்கிழமை பூஜை சமயத்தில் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் சேர்ந்த தாம்பூலத்தை மகாலட்சுமிக்கு படைத்து பூஜை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மகாலெட்சுமி தாயாரை வழிபடுவது எப்படி ?


பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷம் உண்டாக
குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷம் உண்டாக வீட்டிலேயே சிறிய பரிகாரம் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு வழக்கம்போல வெள்ளிக்கிழமை நம் வீட்டினை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் எத்தனை விளக்குகளை ஏற்றி வைத்து இருந்தாலும், மண் அகல் விளக்கில் ஒரு நெய் தீபம் ஏற்றி வைப்பது மிகவும் சிறந்தது.

மகாலெட்சுமி தாயாரை வழிபடுவது எப்படி ?

முதலில் 5 வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் மேல் பகுதியில் 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம், 5 விரலி மஞ்சள், இவைகளை வைக்க வேண்டும். வெற்றிலையுடன் மேலே வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து நம் வீட்டில் இருக்கும் மகாலெட்சுமி தாயாரின் படத்தின் முன்பு வைத்து ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரத்தை உச்சரித்து விட்டு மகாலெட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொள்ளவும். அதன்பின்பு வெற்றிலை பாக்குடன் சேர்ந்த மற்ற பொருட்களும் வெள்ளிக்கிழமை முழுவதும் மகாலட்சுமியின் முன்பு வைத்துவிடுங்கள்.

மகாலெட்சுமி தாயாரை வழிபடுவது எப்படி ?

மறுநாள் அந்த வெற்றிலை பாக்கை மட்டும் பசுமாட்டிற்கு கொடுத்துவிடுங்கள். மற்றவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல் 11 வெள்ளிக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும்.
மகாலெட்சுமியை நினைத்து இந்த பரிகாரத்தை நம் வீட்டில் செய்துவந்தால் நம்முடைய வீட்டில் இருக்கும் எல்லா கஷ்டங்களும், எல்லாப் பிரச்சனைகளும் மறைந்து நல்ல தீர்வு கிடைக்கும். இதை 11 வாரங்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களால் முடிந்தால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் மகாலெட்சுமி தாயாரை நினைத்து இந்த பூஜையைச் செய்து வந்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.
-வித்யா ராஜா