நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி? – தத்ரூபமாக செயல்முறை விளக்கமளித்த தீயணைப்பு துறையினர்!

 

நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி? – தத்ரூபமாக செயல்முறை விளக்கமளித்த தீயணைப்பு துறையினர்!

திருச்சி :

மழைகாலம் தொடங்க உள்ள நிலையில் நீர்நிலைகளில் நீர்பெருகிட அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நீர்நிலைகளில் பெருகும் நீரில் குளிக்கச் சென்று தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குட்டியபட்டியில் உள்ள குளத்தில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர்.
அப்போது சிறுவன் ஒருவர் நீரில் குளிக்கச் சென்று தத்தளித்து நீரில் மூழ்குவது போலும் பின்னர் அந்த சிறுவனை தீயணைப்பு துறையினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர.