கேரட் எண்ணெய்: பளபளப்பான சருமத்துக்கு வீட்டிலேயே இருக்கிறது ஈஸி வழி!

 

கேரட் எண்ணெய்: பளபளப்பான சருமத்துக்கு வீட்டிலேயே இருக்கிறது ஈஸி வழி!

பொலிவான, மிருதுவான, மென்மையான சருமம் என்பது அனைவருக்குமான விருப்பம். சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது, கருவளையம் உள்ளிட்டவை பெண்களை மட்டுமல்ல ஆண்களுக்கும் கவலையை அளிக்கக் கூடியதுதான்.

சருமத்தைப் பராமரிக்க இயற்கையான, செயற்கையான வழிகள் பல உள்ளன. அவற்றை எல்லாம் விட சிறந்த வீட்டு வைத்தியம் ஒன்று உள்ளது என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். அதுதான் கேரட் எண்ணெய்.

கேரட் எண்ணெய்: பளபளப்பான சருமத்துக்கு வீட்டிலேயே இருக்கிறது ஈஸி வழி!

கேரட்டில் பீட்டாகரோட்டின் என்ற சத்து உள்ளது. இது கண் பார்வைக்கு நல்லது. மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தைக் காக்கவும் இது உதவுகிறது என்று படித்துத் தெரிந்திருப்போம். தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால், காரட் ஜூஸ் அருந்தி வந்தால் ஒரு சில வாரங்களில் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

கேரட்டை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி, அந்த எண்ணெய்யைச் சருமம் மற்றும் முடி மீது தடவி வந்தாலும் கூட சருமம் மற்றும் கேசம் பொலிவு பெறும்.

கேரட் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

கேரட் எண்ணெய் தயாரிப்பது மிகவும் ஈஸி. கேரட் மற்றும் தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும். சில நிமிடங்களில் கேரட் எண்ணெய் தயாரித்துவிடலாம்.

ஒரு கேரட், அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இதற்குத் தேவை.

செய்முறை 1

கேரட்டை துருவி அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கேரட்டை போட வேண்டும். மிதமான வெப்பத்தில் கேரட் சில நிமிடம் வேகட்டும். எண்ணெய் கேரட் நிறத்துக்கு மாறும். அப்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

கேரட் 24 மணி நேரத்துக்கு அந்த எண்ணெய்யிலேயே ஊறட்டும். அதன் பிறகு அதை எடுத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது எல்லாம் இந்த எண்ணெய்யை எடுத்து சருமம் மற்றும் முடியில் தடவிப் பயன்படுத்தலாம்.

செய்முறை 2

கேரட் எண்ணெய் தயாரிக்க மற்றுமொரு வழி உள்ளது. இதில் ஒரு கண்ணாடி பாட்டிலில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியோ, சீவியோ போட்டு அப்படியோ மூடி வைத்துவிட வேண்டும். ஒரு வாரத்துக்கு அந்த எண்ணெய் அப்படியே இருக்கட்டும். ஊறுகாய் போல வெயிலில் எல்லாம் வைத்து எடுக்க வேண்டாம்.

ஒரு வாரம் கழித்து அந்த பாட்டிலை எடுத்துப் பாருங்கள். எண்ணெய் ஆரஞ்சு நிறத்துக்கு மாறியிருக்கும். இப்போது அந்த எண்ணெய்யை நன்கு வடிகட்டிக்கொள்ளுங்கள். கை படாமல் கேரட்டை நசுக்கி எண்ணெய்யைச் சுத்தமாக பிழிந்து கொள்ளுங்கள். கேரட் எண்ணெய் தயார்.

இந்த எண்ணெய்யைத் தினமும் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்து, குளித்து வந்தால் சருமம் மிருதுவாக, மென்மையாக மாறுவதைக் கண்கூடாகக் காணலாம். மேலும், சருமம் பொலிவு பெறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருவளையம் உள்ளிட்டவை நீங்கும். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

இதை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்தலாம். பாதுகாப்பானது. பக்கவிளைவுகள் இல்லாதது!