வீட்டுப் பெண்கள் காதல் திருமணம்… உயிரை மாய்த்த அண்ணன், அம்மா!- மண்ணச்சநல்லூர் அருகே சோகம்

 

வீட்டுப் பெண்கள் காதல் திருமணம்… உயிரை மாய்த்த அண்ணன், அம்மா!- மண்ணச்சநல்லூர் அருகே சோகம்

காதல் திருமணம் செய்து கொண்டதால் வேதனையில் தவித்த அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். மகனின் இழப்பை தாங்க முடியாமல் அம்மா உயிரை மாய்த்துக் கொண்டார்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசியை சேர்ந்த பன்னீர்செல்வம்- நீலாவதி தம்பதிக்கு சின்னத்துரை, பால்ராஜ் என் மகன்களும் கல்பனா, மீரா, மீனா என்ற மகள்களும் உள்ளனர். இதில் மீரா, கல்பனா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். சின்னதுரை, தங்கை மீனா ஆகியோர் ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். ஊரடங்கு காரணமாக பால்ராஜ் ஊர் திரும்பினார். இதனிடையே, முசிறி அருகே பேரூரைச் சேர்ந்த ஒரு வாலிபரை தங்கை மீனா காதலிப்பது பால்ராஜிக்கு தெரியவந்தது.

இதனை கண்டித்த அவர், தங்கையிடம், ஏற்கெனவே 2 பேர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஊரில் உள்ளவர்கள் தவறாக பேசுகிறார்கள். இது எனக்கு வேதனை அளிக்கிறது. இதனால் உன் காதலைக் கைவிட்டுவிடு. நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துக்கொள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், சகோதரின் அறிவுரையை கேட்காத மீனா, அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்துகொண்டார்.

வீட்டுப் பெண்கள் காதல் திருமணம்… உயிரை மாய்த்த அண்ணன், அம்மா!- மண்ணச்சநல்லூர் அருகே சோகம்

இதனால் மனமுடைந்த பால்ராஜ் கடந்த 8ம்தேதி ஊரில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறப்பை தாங்க முடியாமல் தவித்த தாய் நீலாவதியும் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த வாத்தலை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சகோதரிகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட அவமானத்தால் சகோதரன் உயிரை மாய்த்துக் கொண்டார். மகனின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்ணச்சநல்லூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.