வேலையை இழந்துவிட்டேன்… சாப்பாட்டுக்கு வழியில்லை… பிறகு தருகிறேன்!- வாடகை கேட்டு தொந்தரவு செய்த வீட்டு ஓனரை கொன்ற வாலிபர்!

 

வேலையை இழந்துவிட்டேன்… சாப்பாட்டுக்கு வழியில்லை… பிறகு தருகிறேன்!- வாடகை கேட்டு தொந்தரவு செய்த வீட்டு ஓனரை கொன்ற வாலிபர்!

4 மாத வீட்டு வாடகை பாக்கியை வீட்டு உரிமையாளர் கேட்டதால், ஓடியிருந்தவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குன்றத்தூரில் நடந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் பலர் வேலைகளையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் தவித்து வருகின்றனர். பலர் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அநேக பேர் வாடகை கொடுக்க முடியாமல் அட்வான்ஸ் பணத்தை கழித்துவிட்டு வீட்டை காலி செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் வாடகை தாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என தமிழக அரசும், நீதிமன்றமும் கூறியிருந்தது.

இந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த வாலிபர் ஒருவரின் பெற்றோர், 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இந்த வாடகை பணத்தை கேட்டு வீட்டு ஓனர் தொந்தரவு செய்ததால் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலையை இழந்துவிட்டேன்… சாப்பாட்டுக்கு வழியில்லை… பிறகு தருகிறேன்!- வாடகை கேட்டு தொந்தரவு செய்த வீட்டு ஓனரை கொன்ற வாலிபர்!

திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் குணசேகரன் (50), ஓய்வு பெற்ற வங்கி ஊழியர், குன்றத்தூர், பண்டார தெருவில் கீழேயும் மேலேயும் வீடு கட்டியுள்ளார். அதில் ஒரு வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீட்டில் அஜித் (21) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வாலிபரின் பெற்றோர் வேலையை இழந்துள்ளனர். அஜித்துக்கும் வேலை கிடைக்கவில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் குடும்பம் தவித்து வந்துள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக வீட்டுவாடகை அஜித்தின் பெற்றோர் கொடுக்கவில்லை.

நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நேற்றிரவு அஜித் பெற்றோரிடம் வீட்டு உரிமையாளர் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார். அப்போது, வேலை இல்லை. வேலை கிடைத்தவுடன் வாடகையை கொடுத்து விடுகிறோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று அஜித்தின் பெற்றோர் வீட்டு ஓனரிடம் கெஞ்சியுள்ளனர். வாடகை தரவில்லை என்றால் வீட்டை உடனே காலி செய்துவிடுங்கள் என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். நள்ளிரவு வீட்டிற்கு வந்த அஜித்திடம் வீட்டு ஓனர் வாடகை கேட்டு தொந்தரவு செய்கிறார். பின்னர் தருகிறோம் என்று சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்.

வேலையை இழந்துவிட்டேன்… சாப்பாட்டுக்கு வழியில்லை… பிறகு தருகிறேன்!- வாடகை கேட்டு தொந்தரவு செய்த வீட்டு ஓனரை கொன்ற வாலிபர்!

வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறுகிறார் என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஜித், வீட்டு ஓனரிடம் வாடகை குறித்து பேசியுள்ளார். அப்போது, இவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீட்டு ஓனர் குணசேகரனை குத்தியுள்ளார். அப்போது, தன்னை காப்பாற்றுங்கள் என்று கதறியபடி குணசேகரன், தெருவில் ஓடியுள்ளார். விடாமல் ஓட, ஓட விரட்டி துரத்தில் அஜித், வீட்டு ஓனரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் குணசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினர் குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளி அஜித்தை கைது செய்தனர்.

நான்கு மாதமாக தராத வாடகையை கேட்ட வீட்டின் உரிமையாளரை வாடகைதாரர் ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் குன்றத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.