வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : தீ வைத்து எரிக்கப்பட்ட காதலன் வீடு!

 

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : தீ வைத்து எரிக்கப்பட்ட காதலன் வீடு!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரின் மகள் பிரியதர்ஷினி பிகாம் படித்து முடித்துள்ளார். பிரியதர்ஷினியும் குன்னத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருப்பதி லேப் டெக்னீஷியன் படித்து முடித்துவிட்டு சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : தீ வைத்து எரிக்கப்பட்ட காதலன் வீடு!
சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்றுக்காலை பிரியதர்ஷினியை திருமணம் செய்துகொள்ள அழைத்து சென்றுள்ளார். இதையறிந்த பிரியதர்ஷினியின் தந்தை சங்கர் சுமார் 60ற்கும் மேற்பட்டோருடன் திருப்பதி வீட்டுக்கு வந்து வீட்டை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பொருட்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதில் எல்லா பொருட்களும் எரிந்து நாசமாயின. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் : தீ வைத்து எரிக்கப்பட்ட காதலன் வீடு!

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரியதர்ஷினியின் தாய் உள்பட 8 பேரை கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.