ஓட்டல் கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள் கொள்ளை!

 

ஓட்டல் கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள் கொள்ளை!

மதுரை

மதுரையில் உணவக கணக்காளரின் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் 32 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடி சென்றனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் லேக் ஏரியாவை சேர்ந்தவர் லட்சுமண நாராயணன். இவரது மனைவி லாவண்யா. இவர் பிரபல உணவகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் லட்சுமண நாராயணன் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஓட்டல் கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள் கொள்ளை!

பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.