‘என்னது கைலாசாவில் ஓட்டலா?.. இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன்: நித்தியானந்தாவின் அடுத்த காமெடி!

 

‘என்னது கைலாசாவில் ஓட்டலா?.. இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன்: நித்தியானந்தாவின் அடுத்த காமெடி!

பாலியல் வழக்குகள் பலவற்றுள் தேடப்பட்டு வரும் குற்றவாளி பிரபல சாமியார் நித்தியானந்தா. அனைத்து வித்தைகளையும் கற்றுத்தேர்ந்த இவர் பெண்களை தன் வசப்படுத்துவதில் கில்லாடி. இவரின் மேல் பல புகார்கள் குவிந்ததால் எங்கயோ எஸ்கேப் ஆகி மறைந்து வாழ்ந்த வருகிறார். அது மட்டுமில்லாமல், கைலாசா என்னும் நாட்டை தான் வாங்கி விட்டதாகவும் அங்கு வசித்து வருவதாகவும் யூ டியூப் சேனல் ஒன்றை உருவாக்கி, அதில் கதை விட்டு வருகிறார். அந்த நாட்டுக்கான பாஸ்போர்டை கூட இவர் சமீபத்தின் வெளியிட்டிருந்தார்.

‘என்னது கைலாசாவில் ஓட்டலா?.. இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன்: நித்தியானந்தாவின் அடுத்த காமெடி!

இதனைத்தொடர்ந்து, நேற்று கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகள் தயாராக இருப்பதாகவும் வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் நித்தியானந்தா கூறினார். அதுமட்டுமில்லாமல் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார கொள்கை கூட தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், நேற்று கைலாசா நாட்டின் கரன்சிகளை வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே, கைலாசாவில் ஓட்டல் வைக்க அனுமதி கேட்டு மதுரை ஓட்டல் நிறுவன அதிபர், நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

‘என்னது கைலாசாவில் ஓட்டலா?.. இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன்: நித்தியானந்தாவின் அடுத்த காமெடி!

இந்த நிலையில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்களுக்கு கைலாசா நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மதுரை ஓட்டல் அதிபர் குமார் மற்றும் திருச்சி ஜவுளிக்கடை அதிபர் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார். மேலும், தனது சொத்துக்களை மதுரை, திருவண்ணாமலைக்காக எழுதி வைத்துள்ளதாகவும் யூ டியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார். இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்து கூறுவதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.