மகாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை ! விடுதி காப்பாளர், கருவை கலைக்க முயற்சித்த தாய், செவிலியரும் கைது !!

 

மகாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை ! விடுதி காப்பாளர், கருவை கலைக்க முயற்சித்த தாய், செவிலியரும் கைது !!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் கட்டோல் கிராமத்தில் விடுதி காப்பாளர் மாற்றுத் திறனாளியான 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்Lள்ளார்.
இதனால் கர்ப்பம் தரித்த அந்த சிறுமியை கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக பெண்ணின் தாய் மற்றும் ஒரு செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளனர். “ஆறாம் வகுப்பு மாணவி, சிறுமி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹாஸ்டலில் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் விடுதி காப்பாளர் ராஜேந்திர கல்பாண்டே என்பவரால் பலமுறை பாலியல் பலாத்காரம் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை ! விடுதி காப்பாளர், கருவை கலைக்க முயற்சித்த தாய், செவிலியரும் கைது !!

இந்த விஷயம் அறிந்த சிந்து என்று அடையாளம் காணப்பட்ட ஒரு செவிலியர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் தாயார் கருக்கலைப்பு செய்யும்படி அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி உள்ளனர். பின்னர் இந்த தகவல் ஒருவழியாக போலீசார் காதுகளுக்கு எட்டியது. தகவல் அறிந்து வந்த போலீசார் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று குற்றவாளிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.