“ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் மற்றும் மகளிருக்காக விடுதி” : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 

“ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் மற்றும்  மகளிருக்காக விடுதி” : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் மற்றும் பணிபுரியும் மகளிருக்காக ரூ.10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, கைத்தறி, நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறைகளின் சார்பாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

“ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் மற்றும்  மகளிருக்காக விடுதி” : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ஆகிய 8 கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

“ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் மற்றும்  மகளிருக்காக விடுதி” : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் நகரில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும், மகளிர் தங்கும் விடுதி மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தலா ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர் மற்றும் பள்ளி மாணவியர் விடுதிகள் ,மயிலாடுதுறையில் தலா ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மாணவியர் விடுதி, நபார்டு நிதியுதவியுடன் திருநெல்வேலியில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவர் விடுதி, கிருஷ்ணகிரி ஒரு கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி என மொத்தம் 10 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதி என எட்டு கட்டடங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.