“அழுகிய நிலையில் கிடந்த அழகிய பெண்ணின் சடலம்” -கொரானா வார்டில் ஊழியர் செய்த கொடூரம்.

 

“அழுகிய நிலையில் கிடந்த அழகிய பெண்ணின் சடலம்” -கொரானா வார்டில் ஊழியர் செய்த கொடூரம்.


ஒரு கொரானா பெண் நோயாளியை கொலை செய்து,அவரிடமிருந்து பணம் செல்போனை திருடிய மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார் .

“அழுகிய நிலையில் கிடந்த அழகிய பெண்ணின் சடலம்” -கொரானா வார்டில் ஊழியர் செய்த கொடூரம்.


தமிழ்நாட்டிலுள்ள சென்னையின் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் மேற்கு தாம்பரத்தில் வசிக்கும் சுனிதா என்ற பெண் கொரானா பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் அந்த பெண்ணை அந்த மருத்துவமனையில் ரதிதேவி என்ற பெண் ஊழியர் கவனித்துக்கொண்டார் .அப்போது அந்த சுனிதாவை அவர் ஸ்கேன் செய்ய ஹாஸ்ப்பிட்டலின் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து செல்லும்போது அந்த பெண்ணிடம் நிறைய பணமும் செல்போனும் இருப்பதை பார்த்து விட்டார் .அதனால் அவரை அந்த ஹாஸ்ப்பிட்டலில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து கொலை செய்து விட்டார் .பின்னர் அவரின் பிணத்தை அந்த ஹாஸ்ப்பிட்டலின் எட்டாவது மாடியில் யாருக்கும் தெரியாமல் வீசி விட்டார் .பிறகு அவரிடமிருந்த செல்போன் மற்றும் 9500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஓடி விட்டார் .அதன் பிறகு சிகிச்சைக்கு சென்ற மனைவியை காணாமல் அவரின் கணவர் போலீசில் புகார் கொடுத்தார் .
பிறகு ஹாஸ்ப்பிட்டல் ஊழியர்கள் கடந்த வாரம் ஜூன் 8 ஆம் தேதி, அந்த பெண்ணின் பிணத்தை அழுகிய நிலையில் மீட்டனர் அதன் பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த ஹாஸ்ப்பிட்டலில் வேலை செய்த ரதிதேவி பணத்துக்காக ஒரு கொரானா பெண் நோயாளியை கொலை செய்ததால் அவரை கைது செய்தனர் .