காதலன் இறந்ததால் வேதனை… மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

 

காதலன் இறந்ததால் வேதனை… மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சின்ன செட்டியாபாளையம், ஏ.டி. காலனியைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மகள் மலர்கொடி(20). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, பொள்ளாச்சியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

காதலன் இறந்ததால் வேதனை… மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

இதனால் மனவேதனையில் இருந்து வந்த மலர்கொடி சம்பவத்தன்று பொள்ளாச்சியில் இருந்து வீட்டுக்கு விடுப்பு எடுத்து வந்துள்ளார். பின்னர், மலர்கொடி வீட்டில் உள்ள அறையில் தூங்கசெல்வதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது மலர்கொடி தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலர்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.