சாக்கடைக் குழியில் சிக்கித் தவித்த குதிரை: லாவகமாக மீட்ட வீரர்கள்!

 

சாக்கடைக் குழியில் சிக்கித் தவித்த குதிரை: லாவகமாக மீட்ட வீரர்கள்!

சத்தியமங்கலம் அருகே சாக்கடையில் விழுந்த குதிரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பாக்கியலட்சுமி நகரில் நூலகம் இருக்கிறது. அதன் அருகே சாக்கடை குழு ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அந்த சாக்கடை குழியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு ஒரு குழு இருப்பதே தெரியாமல் இருந்தது. அவ்வழியே சென்ற குதிரை ஒன்று, தடுமாறி சாக்கடைக் குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

சாக்கடைக் குழியில் சிக்கித் தவித்த குதிரை: லாவகமாக மீட்ட வீரர்கள்!

குதிரையின் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த குதிரையை மீட்டனர். குதிரையின் வயிற்று பகுதியில் கயிற்றை கட்டி உயிருக்கு போராடிய குதிரையை மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்.