பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

 

பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

தஞ்சாவூர்

தஞ்சையில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பழைய பொருட்களை இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்தை ஒட்டி ஊழியர்கள் விளக்கு ஏற்றி வைத்ததாக கூறப்படுகிறது.

பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

அப்போது எதிர்பாராத விதமாக பொருட்கள் மீது தீப்பற்றியது. இதனை தொடர்ந்து, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவிய தீயானது கொழுந்துவிட்டு எரிந்தது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

பழைய பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து

இதனிடையே, அப்பகுதியில் பெட்ரோல் பங்க் மற்றும் ஏராளமான வாகன பழுதுநீக்கும் கடைகள் இருப்பதால், மற்ற கடைகளுக்கும் பரவாமல் தடுக்க அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.