சிறுவனை கடத்தி பாலியல் டார்ச்சர் … இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை!- புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி

 

சிறுவனை கடத்தி பாலியல் டார்ச்சர் … இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை!- புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்தி பாலியல் டார்ச்சர் கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ள புதுச்சேரி நீதிமன்றம்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 8.4.2019 அன்று இரவு வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, பைக்கில் கோட்டகுப்பம் முகமது யூனுஸ் என்பவரின் மகன் உசேன் (22) என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது, விளையாடி கொண்டிருந்த சிறுவனை உசேன், ஆரோவில்லுக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதன் பின்னர், சிறுவனை வீட்டின் முன்பு விட்டுச்சென்றுவிட்டார். வேதனையில் துடித்த அந்த சிறுவன், நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறி கதறியுள்ளான். இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உசேனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி தனபால், உசேனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டதோடு, சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறினார்.