எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார் . ஆனால் அவர் மீண்டும் உடல்நல பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனாவிலிருந்து குணமடைந்த அமைச்சர் அமித்ஷா உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 18ல் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராகியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.