”வீட்டுக்கடன் தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்”- எஸ்.பி.ஐ அறிவிப்பு!

 

”வீட்டுக்கடன் தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்”- எஸ்.பி.ஐ அறிவிப்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன், தொழிற்கடன் வாங்கியவர்கள் தவணை காலத்தை 2 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள் வரை தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

”வீட்டுக்கடன் தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்”- எஸ்.பி.ஐ அறிவிப்பு!

தற்போது, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தொழில் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதையடுத்து, தற்போது பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டுக்கடன், தொழிற்கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கியவர்கள் கடன்களை திருப்பி செலுத்தும் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.

”வீட்டுக்கடன் தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்”- எஸ்.பி.ஐ அறிவிப்பு!

மார்ச் 1 ஆம் தேதிக்கு முன் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளை பயன்படுத்தி இருந்தால், கடன் தவணை செலுத்தும் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். அந்த சலுகையை பயன்படுத்தாதவர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பினை அடுத்து, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகளும் அடுத்தடுத்து இந்த அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.