இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பாராட்டு விழா ; ரூ 1 கோடி சிறப்பு பரிசு : சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை!

 

இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு  பாராட்டு விழா ;  ரூ 1 கோடி சிறப்பு பரிசு : சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை!

நாடு திரும்பும் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பெரிய பாராட்டு விழா நடத்துங்கள் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு  பாராட்டு விழா ;  ரூ 1 கோடி சிறப்பு பரிசு : சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை!

டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம், பட்டாசு வெடிப்பு ,அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரைஇறுதி ஆட்டத்தில் தோல்வி என சாதிரீதியான வசவுகள், எல்லா விளையாட்டுகளில் இருந்தும் தலித்துகளை வெளியே அனுப்ப வேண்டும் என்று கூச்சல் ,உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான். காலிறுதிப் போட்டியில் இந்தியாவை தகுதி ஆகிய தென்னாபிரிக்காவுடனான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்கு பங்களித்தது வந்தனா தான். உலகம் முழுவதும் உள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளது .தேசத்திற்காக விளையாடும் பெருமைமிக்க வீரர்கள் மனதை ரணமாக்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் , இந்திய மகளிர் ஹாக்கி அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசால் பெருமைப்பட்டு உற்சாகப்படுத்த வேண்டும் . அரசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி சிறப்பு பரிசு அறிவிக்க வேண்டும் . குற்றவாளிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவது உறுதி செய்யுமாறு உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதுங்கள் . நாடு திரும்பும் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பெரிய பாராட்டு விழா நடத்துங்கள் . வந்தனா வீட்டிற்கு நீங்களே நேரில் சென்று தேசம் உன் பின்னால் முழுமையாக நிற்கிறது என்று சொல்லுங்கள் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.