2021 ஐபிஎல் சீசனோடு தோனி ரிட்டையர்டா? – சிஎஸ்கேவின் ‘நச்’ பதில்!

 

2021 ஐபிஎல் சீசனோடு தோனி ரிட்டையர்டா? – சிஎஸ்கேவின் ‘நச்’ பதில்!

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் தோனி. இந்தியாவின் கேப்டனாக பொறுப்பெற்று பல கோப்பைகளை வென்று கொடுத்தவர். அவரின் வெற்றி சூத்திரம் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தது. சென்னை அணிக்காக மூன்று முறை கோப்பையை வென்றுகொடுத்துள்ளார். ஐபிஎல் ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை சிஎஸ்கேவின் கேப்டனாகவே தோனி இருந்து வருகிறார். வேறு எந்த கேப்டனுக்கும் இல்லாத சிறப்பம்சம் தோனியிடம் உள்ளது.

2021 ஐபிஎல் சீசனோடு தோனி ரிட்டையர்டா? – சிஎஸ்கேவின் ‘நச்’ பதில்!

இச்சூழலில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே அவருக்குக் கடைசி தொடர் என்று கூறப்பட்டுவருகிறது. எப்போதுமே ஓய்வுமுடிவை அதிரடியாக அறிவிப்பவர் தோனி. ஐபிஎல் தொடரிலும் இவ்வருடம் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என்று தகவல் சொல்லப்படுகிறது. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோனி சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஐபிஎல் சீசன் முடிவின்போது அவரிடம் “இதுதான் உங்களது கடைசி ஐபிஎல் தொடரா?” என்ற கேள்விக்கு, அவர் definitely not என்றார் தோனி.

2021 ஐபிஎல் சீசனோடு தோனி ரிட்டையர்டா? – சிஎஸ்கேவின் ‘நச்’ பதில்!

தற்போது இந்தாண்டு ஐபிஎல் சீசனுக்காக தோனி ஆயத்தமாகி வருகிறார். ஏப்ரல் 10ஆம் தேதியன்று டெல்லி அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் சிஎஸ்கே விளையாட உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மகேந்திர சிங் தோனிக்கு இது தான் கடைசி ஆண்டு என்று நினைக்க வேண்டாம் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியிருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.