இந்துமகா சபா நிர்வாகி வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை

 

இந்துமகா சபா நிர்வாகி வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி

ஓசூரில் இந்துமகா சபா அமைப்பின் நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(52). இவர் இந்துமகா சபா அமைப்பின் மாநில நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு கட்சி அலுவலகம் நின்றிருந்த நாகராஜை, அங்கு வந்த 6 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க தொடங்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த நாகராஜ் தப்பியோட முயன்றபோது, அந்த கும்பல் துரத்திச்சென்று சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் படுகாயமடைந்த நாகராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்துமகா சபா நிர்வாகி வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் ஹட்கோ காவல்நிலைய போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்துமகா நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.