அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி இந்து மக்கள் கட்சி சிறப்பு பூஜை!

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி இந்து மக்கள் கட்சி சிறப்பு பூஜை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி நாமக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

2020 – நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின அடுத்த தேர்தல் நடக்க விருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சி சார்ப்பில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரீஸ் போட்டியிடுகிறார். ஒருபக்கம் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அமெரிக்காவில அதிகரித்தாலும், தேர்தல் களம் அனல் கக்கத் தொடங்கிவிட்டது,

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி இந்து மக்கள் கட்சி சிறப்பு பூஜை!

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் தலைமையில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நீட் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு தாலி, மெட்டியை கழற்ற சொன்னது, நோயாளி அறுவை சிகிச்சைக்கு செல்லும் போது அனைத்து அணிகலன்களையும் கழட்டுவது போன்றது. நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு கருத்து தி.கவின் துண்டு பிரசுரம் போல் உள்ளது. சூர்யா விபரம் இல்லாமல் பேசுகிறார். அவர் தவறாக பயன்படுத்தப் படுகிறார், சூர்யா தனது போக்கை மாற்றி கொள்ள வேண்டும். மதுரையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி இறப்பில் கம்யூனிஸ்ட் கட்சி பிண அரசியல் செய்கிறது” எனக் கூறினார்.