கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்- போலீசார் விசாரணை!

 

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்- போலீசார் விசாரணை!

கோவை

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (37). இவர் இந்து முன்னணி அமைப்பின் உக்கடம் பகுதி நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ராமகிருஷ்ணனை, போத்தனூர் அருகே மர்மநபர்கள் வழிமறித்து தாக்கினர்.

கோவையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்- போலீசார் விசாரணை!

இதில் பலத்தகாயமடைந்த ராமகிருஷ்ணனை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், ராமகிருஷ்ணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த, தாக்குதல் சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.