திருமாவளவனை கண்டித்து, கோபியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

 

திருமாவளவனை கண்டித்து, கோபியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

தமிழ் கடவுள் முருகன் குறித்து இழிவாக பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கண்டித்து கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு தைப்பூச திருவிழாவிற்கு விடுமுறை அளித்தது குறித்து பேசிய திருமாவளவன், முருகன் தமிழ் கடவுள் என்றால் விநாயகர்
எப்படி இந்தி கடவுளானார் என்றும், ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் எப்படி வேறுபாடு உள்ளவர்கள் ஆனார்கள் எனவும் பேசியதாக கூறப்படுகிறது. திருமாவளவனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பினர், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திருமாவளவனை கண்டித்து, கோபியில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் பேருந்து நிலையத்தில் அந்த கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொடர்ந்து இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வரும் திருமாவளவனை வன்மையாக கண்டிப்பதாகவும், அவர் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், திருமாவளவன் கட்சி கூட்டணியில் இடம்பெற்று உள்ள திமுகவிற்கு வாக்களிக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.