இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? : முக ஸ்டாலின் ஆவேசம்!

 

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? : முக ஸ்டாலின் ஆவேசம்!

தி.மு.க எம்.பி கனிமொழியிடம் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? : முக ஸ்டாலின் ஆவேசம்!

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார்.இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்த செயலுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.