புதிய கல்விக் கொள்கை : அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை!

 

புதிய கல்விக் கொள்கை  : அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை!

2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வழங்கியது..அதில் உள்ள பல அம்சங்கள் தமிழகத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. குறிப்பாக, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, தொடக்கக் கல்விக்கான வயதைக் குறைத்தது உள்ளிட்ட பல விஷயங்கள் விமர்சிக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன.

புதிய கல்விக் கொள்கை  : அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை!

தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச்சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கை  : அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை ஆலோசனை!

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக  உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் உயர்கல்வித் துறை செயலர், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதையடுத்து புதிய கல்விகொள்கை குறித்து முதல்வர் கருத்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.