“கஞ்சா கொடுப்பானுங்க ,கண்டவனை கூட்டி வருவானுங்க.”- பள்ளி மாணவிகளை தட்டி தூக்கும் கும்பல்

 

“கஞ்சா கொடுப்பானுங்க ,கண்டவனை கூட்டி வருவானுங்க.”- பள்ளி மாணவிகளை தட்டி தூக்கும் கும்பல்

பல பள்ளி மாணவிகளை சோசியல் மீடியா மூலம் நட்பு கொண்டு அவர்களை போதைக்கு அடிமையாக்கி ,பலான தொழில் நடத்திய ஒரு கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள் .

“கஞ்சா கொடுப்பானுங்க ,கண்டவனை கூட்டி வருவானுங்க.”- பள்ளி மாணவிகளை தட்டி தூக்கும் கும்பல்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள மலப்புரம் நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் எந்நேரமும் இன்ஸ்டாக்ராமில் சாட் செய்வார் .அப்போது அந்த பள்ளி மாணவியிடம் ஒரு பலான தொழில் செய்யும் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் நண்பரானார் .பின்னர் அவர் அந்த பெண்ணோடு அடிக்கடி சாட் செய்து நெருங்கி அவரின் நம்பிக்கைக்கு உரியவாக மாறினார் .
பிறகு அவர் அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு வரவைத்தார்.அவரின் பேச்சை நம்பி சென்ற அந்த பெண்ணுக்கு தன்னுடைய நண்பர்கள் என்று ஒரு பலான தொழில் செய்யும் கூட்டத்தை அவர் அறிமுகம் செய்தார் .பிறகு அந்த பெண்ணை கஞ்சா மற்றும் கோகைன் போன்ற போதை பொருளுக்கு அடிமையாக்கினார்கள் .அதன் பின்னர் அந்த பெண்ணை போதை பொருள் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு மாற்றினார்கள் .அதன் பின்னர் அந்த பெண் கஞ்சா கேட்டு அலறும்போதெல்லாம் ,அவர்கள் அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து பணம் சம்பாதிக்க தொடங்கினர் .இந்த பலான தொழிலை அவர்கள் உயர் மட்ட அளவில் நடத்தி லட்சக்கணக்கில் பணம் குவித்தார்கள் .இப்படி அந்த பெண்ணை அவர்கள் கஞ்சா கொடுத்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதை போலீசார் கண்டறிந்தார்கள் .அதன் பிறகு அந்த பெண்ணை அந்த கூட்டத்திடமிருந்து அவர்கள் மீட்டு சைல்ட் ஹெல்ப் சென்டருக்கு அனுப்பி அவருக்கு சிகிச்சையளிக்கிறார்கள் .
இந்த மோசடியில் 7 பேர் தொடர்பு இருப்பதாக கல்பகஞ்சேரி போலீசார் கண்டறிந்து , இதுவரை ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளார்கள் .போலீசாரிடம் சிக்கிய அந்த நபரிடம் விசாரித்த போது அவர்கள் இதேபோல பல பள்ளி மாணவிகளை குறிவைத்து அவர்களை தூக்கி ,போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலை நடத்தியுள்ளதை கண்டறிந்தார்கள் .

“கஞ்சா கொடுப்பானுங்க ,கண்டவனை கூட்டி வருவானுங்க.”- பள்ளி மாணவிகளை தட்டி தூக்கும் கும்பல்