வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

 

வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

மழையின்போது ஏரிகள் திறப்பில் அரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் மற்றும் திமுக தரப்பில் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. கடந்த முறை பெரும் வெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொண்ட தமிழக அரசு, இந்த ஆண்டு பெய்த பெருமழையிலும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிய நிலையிலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு மழையின் போது நீர் நிலைகள் முழுமையாக நிரம்பிய போதும் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன் பாராட்டு தெரிவித்தார். ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் உதயக்குமார் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது குறிப்பிடதக்கது.