உயர் ரத்த அழுத்தம் : கோவை அருகே காவலர் உயிரிழப்பு!

 

உயர் ரத்த அழுத்தம் : கோவை அருகே காவலர் உயிரிழப்பு!

கோவை அருகே ரத்த அழுத்தம் காரணமாக காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ் (24). இவர் கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட செல்வபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜன.6ம் தேதியன்று வழக்கம் போல பணிக்கு திரும்பிய தங்கராஜ், காவல் நிலையம் வாசலிலேயே மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக சக காவலர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு அளவுக்கு அதிகமான ரத்த கொதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் : கோவை அருகே காவலர் உயிரிழப்பு!

தங்கராஜுக்கு மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக அவர், மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஒரு கை மற்றும் கால் செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை தங்கராஜ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். உயர் ரத்த அழுத்தத்தால் இளம் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.