ட்ரோன்களில் மறைத்து இதெல்லாமா கடத்துவது! – விமான நிலையத்தில் அதிர்ச்சி

 

ட்ரோன்களில் மறைத்து இதெல்லாமா கடத்துவது! – விமான நிலையத்தில் அதிர்ச்சி

கொரோனா காலத்தில் விமான சேவை மிகவும் குறைந்து விட்டது. ஆனால், கடத்தல் காரர்கள் தங்கள் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவே இல்லை. தினந்தோறும் ஏதேனும் ஒரு கடத்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போதும் அப்படி சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

துபாய் டூ சென்னை விமானத்தில் சில பொருட்கள் கடத்துப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையெடுத்து எஃப் இசட் 8517 விமானத்தில் சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த கருப்பசாமி, 65, மற்றும் சசிகுமார், 31, ஆகியோரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் மறித்தனர். அவர்களது பைகளை சோதனை செய்து பார்த்த போது, தானியங்கி குட்டி விமானங்கள் (ட்ரோன்) நான்கு, ரூ 4.17 மதிப்புடைய 10 பேட்டரிகள் மற்றும் ரூ.2 இலட்சம் மதிப்பிலான 100 பெட்டிகளில் சிகரெட்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

ட்ரோன்களில் மறைத்து இதெல்லாமா கடத்துவது! – விமான நிலையத்தில் அதிர்ச்சி

அதே விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லா முகமது இஸ்மாயில், 52, என்பவரை சோதனை செய்த போது, அவரது உள்ளாடையில் இருந்து 130 கிராம் எடையுள்ள தங்கப் பசையைக் கொண்ட பொட்டலம் கைப்பற்றப்பட்டது. அவரது கால் சட்டைப் பையில் இருந்து 84 கிராம் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ.11 இலட்சம் மதிப்புடைய 214 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

துபாயில் இருந்து ஈ கே 544 விமானத்தில் சென்னை வந்திறங்கிய மன்னார்குடியைச் சேர்ந்த புவியரசன், 25, என்பவரை சோதனை செய்த போது, அவரது உடலில் இருந்து ரூ 30.63 இலட்சம் மதிப்புடைய 593 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

ட்ரோன்களில் மறைத்து இதெல்லாமா கடத்துவது! – விமான நிலையத்தில் அதிர்ச்சி

ரூ.41.63 இலட்சம் மதிப்புடைய 807 கிராம் தங்கம், ரூ. 6.17 இலட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், குட்டி விமானங்கள் என மொத்தம் ரூ.47.8 இலட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.