சென்னையில் 18,616 பேருக்கு கொரோனா சிகிச்சை : 55,156 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,383 பேரும் அண்ணா நகரில் 2,075 பேரும் ராயபுரம் மண்டலத்தில் 1,476 பேரும் தேனாம்பேட்டையில் 1,868 பேரும் தண்டையார்பேட்டையில் 1,464 பேரும் அடையாறு மண்டலத்தில் 1,191 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையில் கொரோனாவால்பாதிக்கப்பட்ட 74,969 பேரில் 18,616 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 55,156 குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#chennaicorporation pic.twitter.com/JzRoohnNEi
— Greater Chennai Corporation (@chennaicorp) July 11, 2020