டெங்கு காய்ச்சலை விரட்டும் அம்மான்பச்சரிசி மூலிகை!

 

டெங்கு காய்ச்சலை விரட்டும் அம்மான்பச்சரிசி மூலிகை!

அம்மான் பச்சரிசி… இதைக்கேட்டதும் பலபேர் இதென்ன அரிசியில் ஒரு ரகமா என்பார்கள். மூலிகையில் ஒரு ரகம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. முகப்பருவில் தொடங்கி கால் ஆணி வரை நிறைய பிரச்சினைகளுக்கு இந்த அம்மான் பச்சரிசி நல்ல மருந்து. அத்தகைய சிறப்புவாய்ந்த மூலிகை பற்றி மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரன் சொல்வதைக் கேட்போம்.

டெங்கு காய்ச்சலை விரட்டும் அம்மான்பச்சரிசி மூலிகை!

சூடு, புண்:
உடல் சூடு அதிகரிப்பதால் உடல் எரிச்சல், நமைச்சல் உண்டாகும். பெண்களுக்கு உடல் சூடு மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களால் வெள்ளைப்படுதல் பிரச்சினை வரும். இதற்கு அம்மான்பச்சரிசி அருமையான மருந்து. கைப்பிடி அளவு அம்மான்பச்சரிசி இலையை மையாக அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறைந்து வெள்ளைப்படுதல் சரியாகும். உள் உறுப்புகளில் புண் வந்து அவதிப்படுபவர்களும் அம்மான்பச்சரிசி இலையைச் சாப்பிட்டு பலன்பெறலாம்.

தாய்ப்பால்:
குழந்தை பெற்ற பெண்களில் சிலருக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்காமல் பெற்ற குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இத்தகைய சூழலில் அம்மான்பச்சரிசி இலையைச் சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும். புத்தம்புதிய அம்மான்பச்சரிசி இலைகளை எடுத்து நீரில் நன்றாகக் கழுவி அரைக்கவேண்டும். அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் குடித்துவந்தால் தாராளமாக பால் சுரக்கும், குழந்தையின் வயிறு நிறையும். தாய், சேய்க்கு உடல் பலவீனம் எதுவும் இருந்தால் அதுவும் சரியாகும்.

டெங்கு காய்ச்சலை விரட்டும் அம்மான்பச்சரிசி மூலிகை!
ஆண்மைக்கோளாறு:
பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும்கூட இந்த அம்மான்பச்சரிசி மூலிகை பலன் தரும். ஆண்மைக்கோளாறு, விந்து ஒழுகுதல், நீர்த்துப்போன இந்திரியம் என்று நிறைய பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் அம்மான்பச்சரிசி இலையுடன் சமஅளவு கீழாநெல்லி இலை சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கோலிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத்தயிருடன் சேர்த்து காலையில் கண் விழித்ததும் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாள் சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இந்தக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்துக் கடைந்தும் சாப்பிடலாம்.

பூச்சி:
குழந்தைகளுக்கும்கூட அம்மான்பச்சரிசி பலன் தரும். வயிற்றில் பூச்சி இருப்பதால் உடல்மெலிந்து நோஞ்சான் மாதிரி இருப்பார்கள். எதையும் சாப்பிடப் பிடிக்காது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அம்மான்பச்சரிசி இலையை ஐந்து கிராம் அளவு எடுத்து அரைத்து சாப்பிடக் கொடுத்தால் சரியாகிவிடும். கூடவே மலச்சிக்கல் பிரச்சினையும் சரியாகிவிடும். பத்து கிராம் அம்மான்பச்சரிசி இலையை அரைத்து பால், பனங்கல்கண்டு சேர்த்துக் குடித்தால் உடல் பலம் அதிகரிக்கும். உடல் பலவீனமானவர்கள் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

டெங்கு காய்ச்சலை விரட்டும் அம்மான்பச்சரிசி மூலிகை!

 

டெங்கு காய்ச்சல்:
இவ்வளவும் செய்யக்கூடிய இந்த அம்மான்பச்சரிசி டெங்கு காய்ச்சலைக்கூட கட்டுப்படுத்தும். இதை பிலிப்பைன்ஸ் நாட்டு அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அம்மான்பச்சரிசி இலையில் பத்து கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு பத்து நிமிடம் நன்றாகக் கொதிக்கவைக்க வேண்டும். இதில் 100 மில்லி கசாயத்தை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை குடித்துவந்தால் டெங்கு காய்ச்சல் படிப்படியாக குறையும். முக்கியமா ரத்த அணுக்களை குறையவிடாமல் தடுத்து டெங்கு வைரஸைக் கட்டுப்படுத்துவதாக பிலிப்பைன்ஸ் நாட்டினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.