சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்தது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

 

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! ஸ்தம்பித்தது சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச்சாவடியை கடக்க ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன. பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Image

வெளியூர்களிலிருந்து சென்னை திரும்பும் வாகனங்களால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஃபாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். சென்னை செல்லும் விழுப்புரம் மேம்பாலம் சாலை வாகனங்களால் சூழப்பட்டுள்ளது. இதனால்
உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, மேல்மருவத்தூர், செங்கல்பட்டு டோல்கேட்டில் எறும்பைபோல வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.