3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 

3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் , தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

அதேபோல் வருகின்ற 15ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

நேற்று மாலை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒரிசா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இதனால் இன்று முதல் வருகின்ற 17 ம் தேதி வரை மன்னார் வளைகுடாப் பகுதி, மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.