தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை தொடரும்!

வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு  உள்ளதாகக்  கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று  ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை தொடரும்!


அத்துடன் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மத்திய மேற்கு வங்கக்கடல், மகாராஷ்டிரா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்  என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.