அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிக கனமழை கொட்டும் : வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிக கனமழை கொட்டும் : வானிலை ஆய்வு மையம்  தகவல்!

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவுவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிக கனமழை கொட்டும் : வானிலை ஆய்வு மையம்  தகவல்!

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர் ,திருப்பூர் , திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்ப சலனத்தின் காரணமாக வருகின்ற 19, 20ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர் , சென்னை ,புதுவை பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 21-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மிக கனமழை கொட்டும் : வானிலை ஆய்வு மையம்  தகவல்!

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் .அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.இன்று முதல் 19ஆம் தேதி வரை கேரளா கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். 21ஆம் தேதி வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.