தர்மபுரி- சிட்லிங் பகுதியில் கனமழை- கல்லாற்றில் நீர் பெருக்கு!
Oct 3, 2020, 17:56 IST1601727965000
தர்மபுரி மாவட்டம் சிட்லிங் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கல்லாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அரூர் வட்டம் கோட்டப்பட்டி அருகில் உள்ளது சிட்லிங் வனப்பகுதி. இங்கு ஆங்காங்கே சிறு சிறு விவசாய கிராமங்களும், பெரும் நிலப்பரப்பு வனப்பகுதி ஆகவும் உள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து மழை நீர் பெருக்கெடுத்து கல்லாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்று வட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்லாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை மக்கள் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.