தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் செமீ, விழுப்புரம் மாவட்டம் நேமூரில் 4செமீ மழைப் பதிவாகியுள்ளது.

இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது..