வெளுத்து வாங்கும் கனமழை : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 

வெளுத்து வாங்கும் கனமழை : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி.

வெளுத்து வாங்கும் கனமழை : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கொரோனா காரணமாக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், புதுச்சேரியில் சமீபத்தில் திறக்கப்பட்டன. இதையடுத்து புதுச்சேரியில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது.

வெளுத்து வாங்கும் கனமழை : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்த சூழலில் இன்று முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ளன . அனைத்து கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பிற்கான இறுதி ஆண்டு வகுப்புகள் மற்றும் தொடங்கப்பட்டுள்ளன. அதே ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்த கனமழை பெய்து வருவதால் முதல்வர் நாராயணசாமி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.