அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

 

அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர்,கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

நாளை தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.