தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்!

 

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.