அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!

 

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!

வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்!

தேனி, நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.