தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

 

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

சென்னை , செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ,தரங்கம்பாடி ,பூம்புகார் ,வைதீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்த நிலையில் திருச்சி மாநகர் பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. தூத்துக்குடி கோவில்பட்டி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல் தஞ்சை கும்பகோணம், தர்மபுரி, அரூர் பகுதிகளில் மழை பெய்தது.

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

இந்நிலையில் திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் விதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.