இந்த 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

 

இந்த 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

இந்த 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றைய நிலவரப்படி வானிலை ஆய்வு மையம் வேலூர், திருவண்ணாமலை ,சேலம், ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.நேற்றிரவு முதல் கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. அத்துடன் புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ,சேலம் ,தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, வேலூர் ,திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை ,நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.