ஈரோட்டில் பலத்த மழை: குண்டேரிபள்ளத்தில் 15.4 மி.மீ!

 

ஈரோட்டில் பலத்த மழை: குண்டேரிபள்ளத்தில் 15.4 மி.மீ!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அனைத்து பகுதிகளான குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கொடிவேரி போன்ற பகுதியில் பலத்த மழை பெய்தது. இதேபோல் பவானிசாகர், சத்தியமங்கலம் , தாளவாடி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவும் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குண்டேரிபள்ளம் , சத்தியமங்கலம், அம்மாபேட்டை , வரட்டுப்பள்ளம் , பவானிசாகர் தாளவாடி உட்பட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

ஈரோட்டில் பலத்த மழை: குண்டேரிபள்ளத்தில் 15.4 மி.மீ!

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்றிரவு சாரல் மழை பெய்துள்ளது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
குண்டேரிபள்ளம் 15.4
சத்தியமங்கலம் 10
அம்மாபேட்டை 9
வரட்டுப்பள்ளம் 9
தாளவாடி 5.4
பவானிசாகர் 4.8
கவுந்தப்பாடி 4.8
பவானி 4.6
கொடிவேரி 4.2
கோபி 4
மொடக்குறிச்சி 3
சென்னிமலை 3
கொடிவேரி 2.6
ஈரோடு 2